ADDED : ஆக 29, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்று இடி மின்னலுடன் மழை பெய்தது.
இதில் பெருமாள் கோவில் பட்டியிலும் பலத்த மழை பெய்தது. இதில், பிரதீப் குமார் என்பவரது தோட்டத்தில் கட்டியிருந்த கறவை மாட்டின் மீது, இடி மின்னல் தாக்கியது. இதில் பசுமாடு உயிரிழந்தது. வருவாய் துறையினர் விசாரிக்கின்றனர்.