/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.47 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
/
ரூ.47 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
ADDED : ஜன 01, 2026 07:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த புழுதியூரில், நேற்று கூடிய வாரச்சந்தைக்கு, கலப்பின மற்றும் ஜெர்சி வகையை சேர்ந்த, 270 மாடுகள் மற்றும் கன்றுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
கலப்பின மாடு ஒன்று, 46,000 முதல், 67,000 ரூபாய் வரை விற்பனையா-னது. அதே போல், வளர்ப்பு மாட்டுக்கன்று ஒன்று, 9,000 முதல், 32,000 ரூபாய் வரை விற்பனையா-னது. நேற்று நடந்த சந்தையில், 47 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.

