ADDED : ஜூலை 11, 2026 05:51 AM

அ நிறம் | அளவு
தர்மபுரி; தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவி-யாளர் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியு-றுத்தி, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சுமதி தலைமை வகித்தார். மாநில செயலாளர் லில்லி புஷ்பம், மாவட்ட செயலாளர் கவிதா, மாவட்ட பொருளாளர் தெய்-வானை உட்பட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர். அங்கன்வாடி திட்டத்தை தனியார் மயம் என்ற பெயரில் சீர்குலைக்க கூடாது. அங்கன்-வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் ஓய்வு பெறும்போது, கடைசி மாத ஊதியத்தில் பாதியை அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்-பாட்டம் நடத்தினர்.
