/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
/
மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜூலை 04, 2025 01:32 AM
அரூர், வீட்டுமனை பட்டா கேட்டு, அரூர் ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், அரூரை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என, கடந்த, 2 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டியும், டவுன் பஞ்., பகுதியில் மாற்றுத்திறனாளிகள் பெட்டி கடை வைத்து நடத்த, முதல்வரின் அரசாணை அறிவிப்பை புறக்கணிக்கும், அரூர் டவுன் பஞ்., குறித்து, தமிழக முதல்வரின் கவனத்திற்கு செல்லும் வகையிலும், நேற்று காலை, 10:00 மணிக்கு, அரூர் ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில், அனைத்து மாற்றுத்திறனாளிகளின் உரிமை மீட்பு குழு சார்பில், மாற்றுத்திறனாளிகள், காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.