/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அ.தி.மு.க., - --எம்.எல்.ஏ., மீது போலீசில் தி.மு.க., நிர்வாகி புகார்
/
அ.தி.மு.க., - --எம்.எல்.ஏ., மீது போலீசில் தி.மு.க., நிர்வாகி புகார்
அ.தி.மு.க., - --எம்.எல்.ஏ., மீது போலீசில் தி.மு.க., நிர்வாகி புகார்
அ.தி.மு.க., - --எம்.எல்.ஏ., மீது போலீசில் தி.மு.க., நிர்வாகி புகார்
ADDED : செப் 24, 2024 02:07 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில், அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரையின், 116வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கடந்த, 21ல் நடந்தது. இதில் பேசிய பாப்பிரெட்டிப்பட்டி, அ.தி.மு.க.,- -- எம்.எல்.ஏ., கோவிந்தசாமி மீது, பாப்பிரெட்டிப்-பட்டி தி.மு.க., நகர செயலாளர் ஜெயசந்திரன் பாப்பிரெட்டிப்-பட்டி போலீசில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
பாப்பிரெட்டிப்பட்டியில், கடந்த, 21ல் மாலை நடந்த, அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில், தமிழகத்தில், 5 முறை முதல்வராக இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரை,
மிகவும் தரம் தாழ்ந்த வார்த்தை-களாலும், தி.மு.க., மாவட்ட செயலாளர் பழனியப்பனை மிகவும் கேவலமான வார்த்தைகளாலும், அ.தி.மு.க., - -எம்.எல்.ஏ., கோவிந்தசாமி பேசியுள்ளார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

