ADDED : ஆக 22, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொப்பூர், தர்மபுரி மாவட்டம், சிவாடி கந்துகால்பட்டியை சேர்ந்த, சித்தன், 60, இவர் நேற்று மதியம், 12:05 மணிக்கு, கிருஷ்ணகிரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சவுளுர் அருகே, சாலையை கடந்து செல்ல முயன்றபோது, தர்மபுரியில் இருந்து, சேலம் நோக்கி வந்த ஈச்சர் பார்சல் வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்த சித்தன் சம்பவ இடத்தில் இறந்தார்.
தொப்பூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்

