sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பொ.மல்லாபுரத்தில் ஆக்கிரமிப்பு; வாகன போக்குவரத்து பாதிப்பு

/

பொ.மல்லாபுரத்தில் ஆக்கிரமிப்பு; வாகன போக்குவரத்து பாதிப்பு

பொ.மல்லாபுரத்தில் ஆக்கிரமிப்பு; வாகன போக்குவரத்து பாதிப்பு

பொ.மல்லாபுரத்தில் ஆக்கிரமிப்பு; வாகன போக்குவரத்து பாதிப்பு


ADDED : ஜன 02, 2026 07:24 AM

Google News

ADDED : ஜன 02, 2026 07:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சியில், தர்மபுரி - சேலம் ரோடு, ஆர்.எம்.ரோடு, ரயில்வே ஸ்டேஷன் முக்கிய கடைவீதிகள் என, 5 முனை இடங்களும் ரயில்வே ஸ்டேஷன் முன்பு சந்திக்கிறது. இப்பகுதியில் நேற்று மதியம், 1:00 மணியளவில் தர்மபுரியில் இருந்து வந்த தனியார் பஸ்சும், எதிரே வந்த லாரியும், ரயில்வே ஸ்டேஷன் சந்திப்பில் திரும்பும் போது உரசிக் கொண்டன. இதனால், 5 திசைகளிலும் எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

இதுபோன்ற சம்பவம் தினமும் இந்த சந்திப்பில் நடப்பதால், வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலைகளில் பைக், கார் உள்ளிட்டவர்களை நிறுத்துவதாலும், சாலையோர கடைக்காரர்கள் தங்கள் கடைகளின் முன், கூடுதலாக கடையை நீட்டித்து சாலையை ஆக்கிரமிப்பதாலும், வாகன போக்குவரத்துக்கு கடும் இடைஞ்சல் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க போலீசாரும், நெடுஞ்சாலைத்துறையினரும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us