/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் வெள்ளம்
/
கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் வெள்ளம்
ADDED : அக் 17, 2024 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் வெள்ளம்
கம்பைநல்லுார், அக். 17-
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த கே.ஈச்சம்பாடியில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை, மற்றும் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையிலிருந்து, 2,000 கன அடி நீர் தென்பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்டதால், கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தடுப்பணைக்கு பொதுமக்கள் செல்ல, பொதுப்பணித் துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும், இருமத்துார் முதல், டி.அம்மாபேட்டை வரையுள்ள தென்பெண்ணையாற்று கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.