/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.90 லட்சத்திற்கு ஆடு விற்பனை
/
நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.90 லட்சத்திற்கு ஆடு விற்பனை
நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.90 லட்சத்திற்கு ஆடு விற்பனை
நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.90 லட்சத்திற்கு ஆடு விற்பனை
ADDED : மார் 13, 2024 07:35 AM
நல்லம்பள்ளி : தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் வாரம்தோறும், செவ்வாய்கிழமை வாரச்சந்தை நடப்பது வழக்கம்.
அதன்படி, நேற்று ஆட்டுச்சந்தை கூடியது. இதில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் ஆடுகளை விற்கவும், வாங்கவும் வந்து சென்றனர். தற்போது, பண்டிகை காலங்கள், நிறைவு பெற்று விட்டதால், இறைச்சி தேவை குறைந்து விட்டது. இதனால், ஆடு வரத்து சந்தையில் குறைந்து காணப்பட்டது.
சந்தையில், 8 கிலோ எடை கொண்ட சிறிய ஆடுகள், 3,500 ரூபாய்க்கும், 30 கிலோ வரை எடை கொண்ட பெரிய ஆடுகள், 19,000 ரூபாய் வரையும் விற்பனையாகின. நேற்று நடந்த ஆட்டுச்சந்தையில், 95 லட்சம் ரூபாய் வரை ஆடு விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

