sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

/

நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 14, 2025 01:59 AM

Google News

ADDED : நவ 14, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில், தர்மபுரி நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் இளங்கோவன், மாவட்ட பொருளாளர் கணேஷ் குமார், முன்னாள் மண்டல செயலாளர் முனிராஜ் ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், நெடுஞ்சாலைத்துறையில் பராமரிப்பு பணிகளை தனியாருக்கு கொடுக்கும் நடவடிக்கையை கைவிட்டு, அரசே எடுத்து நடத்த வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரி, 1,000க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பம் செய்து, பணி நியமனத்திற்காக காத்திருக்கின்றனர். அவர்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சிறப்பு நிகழ்வாக அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையிலுள்ள அலுவலக உதவியாளர் மற்றும் காவலர் போன்ற காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.






      Dinamalar
      Follow us