/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தனியார் வேலைவாய்ப்பு முகாம் பணி நியமன ஆணை வழங்கல்
/
தனியார் வேலைவாய்ப்பு முகாம் பணி நியமன ஆணை வழங்கல்
ADDED : நவ 17, 2025 03:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூரில் உள்ள, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அலுவலகத்தில், தனியார் வேலைவாய்ப்பு முகாம், இரண்டு நாட்கள் நடந்தது.
இதில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த தனியார் நிறுவனத்திலுள்ள காலி பணியிடங்களுக்கு நேர்-காணல் நடந்தது. முகாமில், 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அரூர் அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., சம்பத்குமார் பணி நியமன ஆணை-களை வழங்கினார். இதில், அ.தி.மு.க., நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

