sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சாலையில் விடப்பட்ட கால்நடைகள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

/

சாலையில் விடப்பட்ட கால்நடைகள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

சாலையில் விடப்பட்ட கால்நடைகள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

சாலையில் விடப்பட்ட கால்நடைகள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்


ADDED : நவ 20, 2025 01:41 AM

Google News

ADDED : நவ 20, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர், அரூரில், சாலைகளில் அவிழ்த்து விடப்பட்ட கால்நடைகளால், விபத்து அச்சத்தில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், சாலையில் சென்று வர ‍வேண்டிய நிலை உள்ளது.

தர்மபுரி மாவட்டம், அரூரில், தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், திரு.வி.க.நகர், கச்சேரிமேடு, கோவிந்தசாமி நகர் உட்பட, நகரின் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமுள்ளது. இச்சாலைகளில், அரூரிலுள்ள மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் பசுமாடுகள் மற்றும் காளை மாடுகளை அவிழ்த்து விட்டுள்ளதால், அரை சாலைகளில் சுற்றித்திரிகின்றன.

இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மாடுகள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிவதுடன், சாலையிலேயே படுத்துக் கொள்கின்றன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்து அபாயமும் உள்ளது. சாலைகளில் திரியும் கால்நடைகளை கடந்து செல்லும்போது, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடனேயே செல்ல வேண்டியுள்ளது.

இதனிடையே அவ்வாறு சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள், உணவுப்பொருட்களுடன் வீசப்படும் பாலித்தீன் பைகளையும் தின்று, உடல்நல பாதிப்புக்கு ஆளாகின்றன.

எனவே, சாலையில் இதுபோன்று சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு அதிக அபராதம் விதிக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us