sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ரயில்வே சுரங்க பாதை அமைக்க அதிகாரிகள் ஆய்வு: மக்கள் மகிழ்ச்சி

/

ரயில்வே சுரங்க பாதை அமைக்க அதிகாரிகள் ஆய்வு: மக்கள் மகிழ்ச்சி

ரயில்வே சுரங்க பாதை அமைக்க அதிகாரிகள் ஆய்வு: மக்கள் மகிழ்ச்சி

ரயில்வே சுரங்க பாதை அமைக்க அதிகாரிகள் ஆய்வு: மக்கள் மகிழ்ச்சி


ADDED : ஜூன் 21, 2025 01:37 AM

Google News

ADDED : ஜூன் 21, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார்-அரூர் சாலையில், புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. இந்த ரயில்வே ஸ்டேஷன் வழியாக தினமும், 50க்கும் மேற்பட்ட பயணிகள் எக்ஸ்பிரஸ், கூட்ஸ் ரயில்கள் கோவை, சென்னை என, இரு மார்க்கத்தில் செல்கிறது. அவ்வாறு தொடர்ந்து செல்லும் போது ரயில்வே கேட் மூடப்படுகிறது.

இதனால் வேப்பிலைபட்டி, தாளநத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து கடத்துார், தர்மபுரி உள்ளிட்ட நகரங்களுக்கு பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் கேட்டில் மாட்டிக் கொள்கிறது. இதற்கு மாற்றாக ரயில்வே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து கடந்த டிச.,30ல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து கடந்த இரு தினங்களாக மத்திய, மாநில அரசு அதிகாரிகள் சேலம் ரயில்வே உதவி கோட்ட பொறியாளர் சிரஞ்சீவி, பகுதி கோட்ட பொறியாளர் ஜவஹர், இருப்பு பாதை ஆய்வாளர் கண்ணன், அரூர் ஆர்.டி.ஓ.,சின்னுசாமி, பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் சண்முகம், தாசில்தார் செந்தில் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழு புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே கேட் அருகில், ரயில்வே சுரங்க பாதை அமைக்க இடத்தை தேர்வு செய்து ஆய்வு செய்தனர்.






      Dinamalar
      Follow us