/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பயணிகள் நிழற்கூடம் அடிக்கல் நாட்டு விழா
/
பயணிகள் நிழற்கூடம் அடிக்கல் நாட்டு விழா
ADDED : மார் 14, 2024 01:38 AM
அரூர், தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார், தொகுதி மேம்பாட்டு நிதியில், அரூர் நான்கு ரோட்டில், 16 லட்சம் ரூபாய் மதிப்பில், குளிர்சாதன வசதியுடன் கூடிய நவீன நிழற்கூடம் அமைக்கும் பணிக்கு, நேற்று அடிக்கல் நாட்டு விழா நடந்தது. செந்தில்குமார் எம்.பி., பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் சந்திரமோகன், நிர்வாகிகள் முகமது அலி, ரஜினிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல், அரூர் அம்பேத்கர் நகரில், 3.50 லட்சம் மதிப்பில், உயர் கோபுர மின்விளக்கு அமைக்கும் பணியும் துவங்கப்பட்டது. அரூர் உருது துவக்கப்பள்ளி எதிரில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்கை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு செந்தில்குமார் எம்.பி., திறந்து வைத்தார்.

