sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பழுதாகி நின்ற அரசு பஸ் மழையில் பயணிகள் அவதி

/

பழுதாகி நின்ற அரசு பஸ் மழையில் பயணிகள் அவதி

பழுதாகி நின்ற அரசு பஸ் மழையில் பயணிகள் அவதி

பழுதாகி நின்ற அரசு பஸ் மழையில் பயணிகள் அவதி


ADDED : அக் 23, 2025 01:12 AM

Google News

ADDED : அக் 23, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி, தீபாவளியையொட்டி வந்த, 4 நாள் தொடர் விடுமுறை முடிந்து நிலையில், நேற்று வழக்கம் போல், அலுவலக பணி மற்றும் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் மற்றும் அன்றாட பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள், நேற்று காலை பஸ்களில் பயணித்தனர்.

நேற்று காலை, 8:30 மணிக்கு, திருப்பத்துாரில் இருந்து தர்மபுரிக்கு அரசு பஸ் சென்றது. இதில், 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். அந்த பஸ், போச்சம்பள்ளியிலிருந்து, தர்மபுரி செல்லும் மாநில நெடுஞ்சாலையில், 2 கி.மீ., தொலைவிலுள்ள தனியார் பள்ளி அரு‍கே, நேற்று காலை பழுதாகி நின்றது.

அந்த பஸ்சை தொடர்ந்து, 40 நிமிடங்கள் வேறு பஸ், இந்த வழித்தடத்தில் இல்லை. இதனால் பழுதாகி நின்ற பஸ்சில் வந்த பயணிகள் தவித்தனர். மேலும் மழை பெய்து கொண்டிருந்ததால் மிகவும் அவதிப்பட்டனர். தொடர்ந்து, 40 நிமிடங்களுக்கு பின் வந்த மற்றொரு அரசு பஸ்சில் ஏறிச்சென்றனர்.






      Dinamalar
      Follow us