sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ரயில்வே தண்டவாளத்தில் மக்கள் தர்ணா போராட்டம்

/

ரயில்வே தண்டவாளத்தில் மக்கள் தர்ணா போராட்டம்

ரயில்வே தண்டவாளத்தில் மக்கள் தர்ணா போராட்டம்

ரயில்வே தண்டவாளத்தில் மக்கள் தர்ணா போராட்டம்


ADDED : டிச 03, 2024 07:15 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: பாலக்கோடு அடுத்த, மோதுகுலஹள்ளி ரயில்வே கேட் வழியாக கரகதஹள்ளி,

மோதுகுலஹள்ளி, காட்டம்பட்டி, சோமனஹள்ளி, உள்ளிட்ட பகுதிகைளை சேர்ந்த

பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் விவசாய பொருட்களை

கொண்டு செல்-கின்றனர். கடந்த, 4 மாதங்களுக்கு முன், கேட்டை மூடிவிட்டு, சுரங்க பாலம் அமைத்தனர். அவசர

கதியில் அமைக்கப்பட்ட பாலத்-திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால்,

அதை கண்-டுகொள்ளாமல் ரயில்வே நிர்வாகம் சுரங்க பாலத்தை கட்டி முடித்-தது. கடந்த,

2 நாட்களாக பெய்த கனமழையால் பாலத்தில், 10 அடிக்கு மேல் தேங்கிய தண்ணீர்

வெளியேற வழியில்லாததால், பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இது குறித்து, தகவல் அளித்தும் ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்-ளாததால்,

ஆத்திரமடைந்த பொதுமக்கள், மோதுகுலஹள்ளி ரயில்வே தண்டவாளத்தில்

அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடு-பட்டனர். பாலக்கோடு டி.எஸ்பி., மனோகரன்,

தாசில்தார் ரஜினி, பி.டி.ஓ.,க்கள் மீனா, ரேணுகா ஆகியோர் பொதுமக்களை சமரசம் செய்து,

மழைநீர் வெளியேற நடவடிக்கை எடுப்பதாக, உறுதி அளித்ததையடுத்து

பொதுமக்கள் தர்ணாவை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us