ADDED : ஜூலை 22, 2026 05:00 AM
அ நிறம் | அளவு
அரூர்:தர்மபுரி
மாவட்டம், அரூர் அடுத்த எருமியாம்பட்டியை சேர்ந்தவர் குணசேகரன்,
இவரது மகன் கமலேஷ், 17,
இவர், புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில்
பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கு சரிவர
செல்லவில்லை என்றும், தலைமுடியை திருத்தம் செய்ய சொல்லியும் கமலேஷை
அவரது தந்தை கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு
டி.வி.எஸ்., ஸ்கூட்டியில் சென்ற கமலேஷ் வீடு திரும்பவில்லை. புகார் படி,
கோபிநாதம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
