/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரயில்வே ஸ்டேஷனில் போலீசார் சோதனை
/
ரயில்வே ஸ்டேஷனில் போலீசார் சோதனை
ADDED : நவ 13, 2025 03:15 AM
தர்மபுரி: டில்லியில் நடந்த கார் குண்டுவெடி சம்பவத்தின் எதிரொலியாக, தர்மபுரி ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பஸ் ஸ்டாண்ட்டில் போலீசார், மோப்பநாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
தலைநகர் டில்லியில் கடந்த, 10ம் தேதியன்று நடந்த கார் குண்டு-வெடிப்பு சம்பவத்தில், 13 பேர் பலியாகினர். இதையடுத்து நாடு முழுவதும் போலீசார் மற்றும் ராணுவத்தினர் உஷார் படுத்தப்பட்-டனர். இதன் எதிரொலியாக, நேற்று தர்மபுரி மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன் உத்தரவின்படி, தலைமை காவலர்கள் சத்-தியகுமார், முருகன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு-வினர், 'அழகன், லுாபி' என்ற, 2 மோப்ப நாய்கள் மற்றும் தர்ம-புரி ரயில்வே போலீஸ் எஸ்.எஸ்.ஐ., ரமேஷ் தலைமையிலான போலீசார், தர்மபுரி ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணிகளின் உடைமைகள் மற்றும் ரயில் பெட்டிகள், தர்ம-புரி பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்-டனர்.
அதேபோல், மொரப்பூர், பொம்மிடி ரயில்வே ஸ்டேஷன்கள், தர்-மபுரி மருத்துவ கல்லுாரி மருத்துவமனை போன்ற முக்கிய இடங்-களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

