/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மனைவியை தாக்கிய போலீஸ்காரருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
/
மனைவியை தாக்கிய போலீஸ்காரருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
மனைவியை தாக்கிய போலீஸ்காரருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
மனைவியை தாக்கிய போலீஸ்காரருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
ADDED : டிச 11, 2025 06:33 AM

தர்மபுரி: தர்மபுரியில், மனைவியை தாக்கிய போலீஸ்கா-ரருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, தர்-மபுரி மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
தர்மபுரியை சேர்ந்தவர் வீரமணி, 45. இவரின் மனைவி பிரேமா, 43. இருவரும், தர்மபுரி ஆயுதப்-படையில் போலீஸ்காரர்களாக பணிபுரிந்து வந்-தனர். இவர்களுக்கு, 2 குழந்தைகள்.கடந்த, 2017-ல் ஏற்பட்ட குடும்ப தகராறில் வீர-மணி, மனைவி பிரேமாவை தாக்கியதில், அவ-ருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், அவரின் சுயநினைவு பாதித்து, வழக்க-மான பணிகளை செய்ய முடியாமல் இருந்தார்.
தர்மபுரி டவுன் போலீசார், வீரமணியை கைது செய்தனர்.இந்த வழக்கு, தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் விசா-ரணை முடிவில், குற்றச்சாட்டு உறுதியானதால், வீரமணிக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும், 20,000 ரூபாய் அபராதம் விதித்து, விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி அசின்பானு, நேற்று தீர்ப்பளித்தார்.

