ADDED : மே 25, 2026 06:05 AM
அ நிறம் | அளவு
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த செல்லம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட சங்கிலி வாடியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 4.50 லட்சம் ரூபாய் மதிப்பில்,
ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கு, நேற்று பூமி பூஜை நடந்தது. பணிகளை அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்-குமார் துவக்கி வைத்தார். இதில், அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
