/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வாணியாறு அணையில் உபரிநீர் திறக்க வாய்ப்பு
/
வாணியாறு அணையில் உபரிநீர் திறக்க வாய்ப்பு
ADDED : அக் 24, 2024 02:18 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, 65.27 அடி உயர வாணியாறு அணை நீர்மட்டம் தற்போது, 60 அடியாக உள்ளது. நீர்வரத்தால், அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இது குறித்து, வாணியாறு அணை உதவி பொறியாளர் கிருபா கூறியதாவது:
வாணியாறு அணைக்கு, தற்போது நீர்வரத்து வினாடிக்கு, 197 கன அடியாகவும், நீர்இருப்பு, 340.34 மில்லியன் கன அடியாகவும் உள்-ளது. அணை நீர்மட்டம் இன்று, 63 அடியை எட்டினால் பாது-காப்பு கருதி எந்நேரமும் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. எனவே, வாணி ஆற்றின் கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாகவும், தங்களது கால்நடைகளை ஆற்றுப்பகுதியில் மேய்ச்சலுக்கு விடாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.