/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சர்வீஸ் ரோடு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
/
சர்வீஸ் ரோடு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
ADDED : டிச 08, 2025 08:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் - ஊத்தங்கரை நான்கு வழிச்சாலையில், ரவுண்டானாவில் துவங்கி, ஆசிரியர் நகர், குறிஞ்சி நகர், மோப்பிரிப்பட்டி வரையி-லான, ஒரு கி.மீ., துாரத்திற்கு இருபுறமும் சர்வீஸ் ரோடு இல்லை.
இதனால், 300க்கும் மேற்-பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் புனித
மரியன்னை மேல்நிலைப்பள்-ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர் அவதிப்ப-டுகின்றனர். சில நேரங்களில் நான்கு வழி தடுப்பு-களை தாண்டி, குறுக்கே நடந்து செல்லும் போது, விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே, இப்பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்க, பொது-மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

