sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வாணியாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

/

வாணியாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

வாணியாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

வாணியாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை


ADDED : ஜூலை 04, 2025 01:35 AM

Google News

ADDED : ஜூலை 04, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர், தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த முள்ளிக்காட்டில், வாணியாறு அணை உள்ளது. மழைக்காலங்களில் அணை நிரம்பும் போது, அதிலிருந்து, திறந்து விடப்படும் உபரி நீர், வாணியாற்றின் வழியாக சென்று, இறுதியில் தென்பெண்ணையாற்றில் கலக்கிறது.

அவ்வாறு, ஆற்றில் தண்ணீர் செல்லும்போது, கரைப்பகுதியை ஒட்டிய விவசாய கிணறுகள் மற்றும் அரூர் நகரில் குடியிருப்பு பகுதி களில் அமைக்கப்பட்டுள்ள, ஆழ்துளை கிணறுகளின் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது.

அரூர் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும், சாக்கடை கழிவுநீர் அனைத்தும், பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள வாணியாற்றில் கலக்கிறது. இவற்றுடன், குப்பை, ஆடு, மாடு, கோழி ஆகியவற்றின் இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுகிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், வாணியாற்றின் தண்ணீர் நிறம் மாறி மாசடைகிறது. வாணியாற்றை பாதுகாக்கும் வகையில், நகரில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீர், வாணியாற்றில் கலப்பதை தடுக்க டவுன் பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us