sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

குண்டும், குழியுமான தார்ச்சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

/

குண்டும், குழியுமான தார்ச்சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

குண்டும், குழியுமான தார்ச்சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

குண்டும், குழியுமான தார்ச்சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


ADDED : நவ 17, 2025 03:59 AM

Google News

ADDED : நவ 17, 2025 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏரியூர்: ஏரியூர் அடுத்த இராமகொண்ட அள்ளி, கண்ணப்பன் நகர் சேத-மடைந்த தார்ச்சாலையை சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைத்து தர, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இராம-கொண்ட அள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கண்ணப்பன் நகரில், 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு கடந்த, 12 வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட தார்ச்சாலை சேதம-டைந்து குண்டும், குழியுமாய் காணப்படுகிறது. இதனால், அப்ப-குதியில் உள்ள பள்ளி செல்லும் குழந்தைகள், பெரியோர்கள், வாகன ஓட்டிகள் என, பல்வேறு தரப்பினரும் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இங்கு அடிக்கடி இருசக்கர வாகன ஓட்-டிகள் கீழே விழுத்து, விபத்தில் சிக்குவது தொடர்கிறது. இதுகு-றித்து, அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்-கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, மாவட்ட நிர்வாக உடன-டியாக இப்பகுதியில் புதிய தார்ச்சாலையை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us