sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தர்மபுரி, நல்லம்பள்ளியில் மழை விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி

/

தர்மபுரி, நல்லம்பள்ளியில் மழை விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி

தர்மபுரி, நல்லம்பள்ளியில் மழை விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி

தர்மபுரி, நல்லம்பள்ளியில் மழை விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி


ADDED : ஜூலை 17, 2025 01:23 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி, தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என, வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் நேற்று காலை முதல், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை, 4:45 மணி முதல் நல்லம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.

தொடர்ந்து, 6:15 முதல், தர்மபுரி மற்றும் அதன் கூற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. தர்மபுரி டவுன், பகுதி மற்றும் இலக்கியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில், மழை நீருடன் கழிவு நீரும் கலந்து ஓடியதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். சாலைகள் வெறிச்சோடிய நிலையில், வாகன ஓட்டிகள் மிதமான வேகத்தில், முகப்பு விளக்கை எரிய விட்ட படி வாகனத்தை ஓட்டி சென்றனர். கிராம பகுதிகளில், மானாவாரி விவசாயம் செய்திருந்த விவசாயிகள், கனமழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us