ADDED : செப் 01, 2026 06:09 AM
தர்மபுரி; இந்திய ஐக்கிய கம்யூ., கட்சி சார்பில், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது:
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா நார்த்-தம்பட்டி கிராமத்தை சேர்ந்த அருந்ததியர் சமுதா-யத்தை சேர்ந்தவர்களுக்கு கடந்த, 1997ம் ஆண்டு தர்மபுரி அருகே, ஏ ரெட்டிஹள்ளி வருவாய் கிரா-மத்தில், 7.73 ஏக்கர் நிலம் ஆதிதிராவிடர் நலத்-துறை தனி தாசில்தார் மூலம், ஆர்ஜிதம் செய்து வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அதில், பலர் வீடுகட்டி வசித்து வந்தனர். 2004ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போது, அப்பகுதியில் வழங்கப்பட்ட வீட்டு
மனைகள் தேசிய நெடுஞ்சாலைக்காக எடுக்கப்-பட்டது. இதில், 25 பயனாளிகளுக்கு பழைய இடத்தின் அருகில் வீட்டுமனை வழங்காமல், வேறு இடத்தில் வழங்க முயற்சி நடந்து வருகி-றது. எனவே, தனி தாசில்தார் இதன் மீது, உரிய கவனம் செலுத்தி ஏற்கனவே, ஒதுக்கப்பட்ட இடத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவித்திருந்தனர்.
