sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஒகேனக்கல் குடிநீர் கேட்டு சாலை மறியல்

/

ஒகேனக்கல் குடிநீர் கேட்டு சாலை மறியல்

ஒகேனக்கல் குடிநீர் கேட்டு சாலை மறியல்

ஒகேனக்கல் குடிநீர் கேட்டு சாலை மறியல்


ADDED : ஜன 19, 2025 06:59 AM

Google News

ADDED : ஜன 19, 2025 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மொரப்பூர்: மொரப்பூர் அருகே, ஒகேனக்கல் குடிநீர் வழங்கக்கோரி, பொது-மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த நவலை பஞ்., அண்-ணாமலைப்பட்டியில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்-கின்றனர். அருகிலுள்ள கிராமங்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் நடந்து வரும் நிலையில், அண்ணாமலைப்பட்டி கிராம மக்களுக்கு முறையாக ஒகேனக்கல் குடிநீர் வழங்கப்ப-டாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட, 50க்கும் மேற்-பட்டோர், நேற்று காலை, 6:45 மணிக்கு காலிக்குடங்களுடன், அரூர் - கிருஷ்ணகிரி சாலையில், அண்ணாமலைப்பட்டி பஸ் நிறுத்தத்தில், சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் மொரப்பூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணலீலா பேச்சுவார்த்தை நடத்-தினார். அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி ஒகே-னக்கல் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள், 7:30 மணிக்கு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us