ADDED : டிச 23, 2024 09:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் அடுத்த அச்சல்வாடி பஞ்.,க்கு உட்பட்ட குடுமியாம்பட்டியில், 5.25 லட்சம் ரூபாய் மதிப்பில், கழிவு நீர் கால்வாய் கட்டும் பணிக்கு, நேற்று பூமி பூஜை நடந்தது. அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் பணிகளை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், அரூர், அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, நகர செயலாளர் பாபு, ஒன்றிய கவுன்சிலர் பச்சையம்மாள், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் மதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

