/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி
/
மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி
ADDED : நவ 15, 2025 01:57 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறைத் துறை, காரி-மங்கலம் அபித குஜாம்பாள் சமேத ஆருணேஸ்வர் மற்றும் லட்சுமி நாராயண சுவாமி கோவில் நிர்வாகம் சார்பில், மூத்த தம்-பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கோவில் அறங்காவலர் குழு தலைவர் மாதப்பன் தலைமை வகித்தார். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ரமேஷ், ஜெயா, சுரேஷ், ஹரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறநிலையத்துறை இணை ஆணையர் கிருஷ்ணன், உதவி ஆணையர் மகாவிஷ்ணு, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் அன்பழகன், காரிமங்கலம் பேரூராட்சி சேர்மன் மனோகரன் ஆகியோர் விழாவில் பங்-கேற்று, மூத்த தம்பதிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சீர்வ-ரிசை பொருட்களை வழங்கி ஆசி பெற்றனர்.

