sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

100 நாள் வேலை கேட்டு மறியல்

/

100 நாள் வேலை கேட்டு மறியல்

100 நாள் வேலை கேட்டு மறியல்

100 நாள் வேலை கேட்டு மறியல்


ADDED : ஆக 20, 2024 02:46 AM

Google News

ADDED : ஆக 20, 2024 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன்கனிக்கோட்டை: : கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியத்திலுள்ள, சந்தனப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட திருமலை நகர், திப்பசந்திரம், ஏணிமுச்சந்திரம், ஜார்கலட்டியில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 250 க்கும் மேற்பட்டோருக்கு, 100 நாள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், சந்தனப்பள்ளி அருகே கிரியனப்பள்ளி சாலையிலுள்ள ஏரி பகுதியில், நேற்று காலை எஸ்.குருபட்டி, தல்சூர் கிராமங்களை சேர்ந்த, 60 க்கும் மேற்பட்ட மக்கள், 100 நாள் வேலைக்காக காலை, 7:00 மணி முதல் காத்திருந்தனர்.

அங்கு வந்த பணி தள பொறுப்பாளர், மொபைல்போனில் ஆன்லைன் வழியாக மக்களின் வருகை பதிவேட்டை அப்டேட் செய்தார். சர்வர் பிரச்னையால் காலை, 10:30 மணி வரை, 11 பேருக்கு மட்டுமே வருகை பதிவேடு அப்டேட் செய்ய முடிந்ததால், மற்றவர்களுக்கு வேலையில்லை என அவர் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த கிராம மக்கள், 50 க்கும் மேற்பட்டோர், சந்தனப்பள்ளி பஞ்., அலுவலகத்தை நேற்று காலை, 10:30 மணிக்கு முற்றுகையிட்டு, அய்யூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். கெலமங்கலம் துணை பி.டி.ஓ., முருகன், சந்தனப்பள்ளி பஞ்., செயலர் மஞ்சுநாத் மற்றும் தேன்கனிக்கோட்டை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அனைவருக்கும் வேலை வழங்குவதாக உறுதி அளித்ததால் மறியல் கைவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us