/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை திருட்டு
/
கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை திருட்டு
ADDED : அக் 12, 2025 03:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அதியமான்கோட்டை: சேலம்- - தர்மபுரி நெடுஞ்சாலையில் தர்மபுரி அடுத்த, தொழில் மையம் பஸ் ஸ்டாப்பில், ராஜகணபதி விநாயகர் கோவில் உள்ளது. கடந்த மாதம், 15 அன்று பூஜை முடிந்த பின், வழக்கம் போல் கோவிலை பூட்டி விட்டு சென்றனர்.
மறுநாள் காலை வந்து பார்த்தபோது, கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த, காணிக்கை திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து, அப்பகுதியை சேர்ந்த செல்வம் புகார் படி, அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.