/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நீரில் மிதக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வீடு வாங்க விண்ணப்பித்தவர்கள் அச்சம்
/
நீரில் மிதக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வீடு வாங்க விண்ணப்பித்தவர்கள் அச்சம்
நீரில் மிதக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வீடு வாங்க விண்ணப்பித்தவர்கள் அச்சம்
நீரில் மிதக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வீடு வாங்க விண்ணப்பித்தவர்கள் அச்சம்
ADDED : டிச 05, 2024 07:15 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக,
அதியமான்-கோட்டை, மோதுார், முக்குளம், கொண்டஹரஹள்ளி, மோலை-யானுார், நம்பிப்பட்டி,
பீச்சான்கொட்டாய் ஆகிய பகுதிகளில், 247 கோடி ரூபாய் மதிப்பில் அடுக்குமாடிகள் கட்டி முடிக்கப்-பட்டு,
பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.இதில், தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டையில், பொதுப்பிரிவி-னருக்கு, அடுக்குமாடி கட்டும் பணி,
பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது. பிற பகுதிகளில், அடுக்குமாடி குடியி-ருப்பு கட்டும் பணி
முடிந்த நிலையில், அதியமான்கோட்டையில் பணி துவங்காததற்கு, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி
எழுந்-தது. மேலும், அதியமான்கோட்டையில் அடுக்குமாடி கட்டப்-படும் இடம் ஏரியில், சவுடு மண் உள்ள
பகுதியாகவும் உள்-ளதால், தரமான முறையில் அடுக்குமாடி குடியிருப்புக்களை கட்ட கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், கட்டுமான பணிகள், 2022 நவ.,ல் துவங்கியது.பணிகள், 2 ஆண்டுகளை கடந்த நிலையில் இன்னும் முழுமை-யாக முடியவில்லை. கடந்த ஆக., 11 அன்று
அதியமான்-கோட்டை அடுக்குமாடி குடியிருப்பில், வீடுகள் பெற விரும்-புவோர் விண்ணப்பிக்க, மாவட்ட கலெக்டர்
சாந்தி அறிவித்தி-ருந்தார். நவ., 30, டிச., 1, 2 ஆகிய 3 நாட்கள் பெஞ்சல் புயல் தாக்-கத்தால், தர்மபுரி மாவட்டத்தில்
கனமழை கொட்டி தீர்த்தது. அதிக நீர்வரத்தால், நேற்று முன்தினம், 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட
அதியமான்கோட்டை ஏரி, முழு கொள்ளளவை எட்டி-யது. இதனால், ஏரியில் கட்டப்பட்ட அடுக்குமாடி
குடியிருப்புக்கு செல்லும் சாலை மற்றும் தரைதளத்திலுள்ள வீடுகள் நீரில் மிதக்-கின்றன. மொத்தம், 528
வீடுகளில் காலியாக உள்ள, 523 வீடு-களை வாங்க விண்ணப்பித்த பயனாளிகள் அச்சமடைந்துள்ளனர்