/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வனத்தில் மூங்கில் வெட்டிய மூவருக்கு ரூ.30,000 அபராதம்
/
வனத்தில் மூங்கில் வெட்டிய மூவருக்கு ரூ.30,000 அபராதம்
வனத்தில் மூங்கில் வெட்டிய மூவருக்கு ரூ.30,000 அபராதம்
வனத்தில் மூங்கில் வெட்டிய மூவருக்கு ரூ.30,000 அபராதம்
ADDED : ஜூன் 16, 2025 03:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை காப்புக்காடு, அம்மா குட்டை ஆலமர சராக பகுதியில், கடந்த, 14ல் தீர்த்த-மலை வனத்துறையினர் ரோந்து சென்றனர்.
அப்போது, பையர் நாயக்கன்பட்டியை சேர்ந்த பச்சியப்பன், 60, சேட்டு, 61, தேவராஜ், 58, ஆகிய, மூவரும் கொடுவாள்களுடன் அத்துமீறி நுழைந்து, பச்சை மூங்கில்களை வெட்டி, பிளந்து தப்பைகளாக மாற்றி, படல்கள் செய்து கொண்டிருந்தனர். அவர்களை வனத்து-றையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் மூவருக்கும், தலா, 10,000 ரூபாய் வீதம் என, மொத்தம், 30,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தர-விட்டார்.