/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சொகுசு கார் மோதி திருநங்கை உயிரிழப்பு
/
சொகுசு கார் மோதி திருநங்கை உயிரிழப்பு
ADDED : டிச 14, 2024 02:54 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மகேந்திரமங்கலம் பகு-தியை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 55. இவருக்கு ராஜி என்ற மனைவி, கார்த்திக், 32, சிவகுமார், 27 என இரு மகன்கள் உள்-ளனர். இதில், இரண்டாவது மகன் சிவக்குமார், அவரது சிறிய பருவத்தில் மாற்றம் ஏற்பட்டு திருநங்கையாக மாறிவிட்டு, தெருக்-கூத்து நாடகங்களில் பெண் வேடமிட்டு நடித்து வந்துள்ளார்.
இந்-நிலையில் கடந்த, 11 இரவு, 9:00 மணிக்கு ஜக்கசமுத்திரம் வரை சென்று விட்டு வருவதாக தனது நண்பருடன் சென்றார்.தர்மபுரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், மின்வாரியத்துறை அலுவலகம் அருகே ரோட்டோரம் நடந்து சென்ற போது, தர்மபு-ரியில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற டாடா இண்டிகா கார் மோதி-யதில், திருநங்கை சிவக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரி-ழந்தார். மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்
பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.