/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
எஸ்.ஐ.ஆர்.,ஐ கண்டித்து த.வெ.க.,வினர் ஆர்ப்பாட்டம்
/
எஸ்.ஐ.ஆர்.,ஐ கண்டித்து த.வெ.க.,வினர் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 17, 2025 03:56 AM
தர்மபுரி: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி குளறுபடிகளை கண்டித்து, தர்மபுரியில், பி.எஸ்.என்.எல்., அலுவ-லகம் அருகே, த.வெ.க., சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழகம் முழுவதும், த.வெ.க., சார்பில் நடந்த கண்டன ஆர்ப்-பாட்டத்தையொட்டி, தர்மபுரியிலும் கண்டன ஆர்ப்பாட்டம், மாவட்ட செயலாளர்கள் சிவா, விஜயகாந்த் ஆகியோர் தலை-மையில் நடந்தது. கரூர் சம்பவத்தின் எதிரொலியாக, தர்மபுரியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்த தொண்டர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட் பாக்கெட் வழங்கப்பட்டது. மேலும் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.*கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அண்ணா-துரை சிலை எதிரே, த.வெ.க., சார்பில் நேற்று கண்டன ஆர்ப்-பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் வடி வேல் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி நகர செயலாளர் சசிக்-குமார் வரவேற்றார்.
மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ், கிழக்கு மாவட்ட செய-லாளர் முரளி முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், தமிழக மக்களின் வாக்குரிமைகளை பறிக்கும் விதமாக வாக்காளர் பட்-டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடப்பதாக கூறி கோஷங்களை எழுப்பினர்.

