ADDED : மே 30, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கும்பாரஹள்ளியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மனைவி சசிகலா, 28. இவர்களுக்கு, ஒரு மகன், இரு மகள்கள். சசிகலா நேற்று காலை வீட்டிலிருந்தபோது, குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்தார்.
உறவினர்கள் அவரை மீட்டு துரிஞ்சிப்பட்டியில் உள்ள டாக்டர் கலைச்செல்வியிடம் கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர் சசிகலா இறந்து விட்டதாக தெரிவித்தார். பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.