ADDED : ஆக 01, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி அருகே, கொட்டாம்பட்டியை சேர்ந்த அந்தோணியம்மாள், 54. இவர் நேற்று முன்தினம் மாலை, அவரது வீட்டின் அருகே இருந்த வைக்கோலை கால்நடைகளுக்கு போட எடுக்க சென்றார்.
அப்போது, பாம்பு கடித்ததில் மயங்கி விழுந்தவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்தவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

