/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாய்பாபா கோயிலில் நாளை வருடாபிேஷக விழா
/
சாய்பாபா கோயிலில் நாளை வருடாபிேஷக விழா
ADDED : மார் 27, 2024 06:44 AM

திண்டுக்கல் : திண்டுக்கல், ஷீரடி சாய்பாபா கோயிலின் 3ம் ஆண்டு வருடாபிேஷக விழா ,அன்னதான கூட திறப்பு விழா நாளை( மார்ச் 27) நடக்கிறது.
திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரம் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோயிலில் நாள்தோறும் அபிஷேகம் நடைபெறும் நிலையில் 3 வேளையும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நாளை 3ம் ஆண்டு வருடாபிேஷக விழாவோடு அன்னதான கூட திறப்பு விழா நடக்கிறது. விழாவில் ஷீரடியில் இருந்து அச்சுதானந்தன்சாய் கலந்து கொள்கிறார். நாளை காலை 6:00 மணி முதல் பக்தர்களின் கரங்களால் பாலாபிேஷம் விபூதி அபிேஷகம் நடக்கிறது.
காலை 9:00 மணிக்கு மேல் கணபதி ேஹாமம் நடத்தப்பட்டு ஷீரடியில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரால் சுவாமிக்கு அபிேஷகம் நடக்கிறது . 10:30 மணிக்கு அன்னதா கூட திறப்பு விழா நடக்கிறது. காலை முதல் இரவு வரை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.இதையொட்டி நேற்று மாலை நடந்த மின்தேர் பவனியில் பாபா 4 ரத வீதி வழியாக நகர்வலம் வந்தது .

