/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
12,10ம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சி
/
12,10ம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சி
ADDED : மே 15, 2024 05:42 AM

பட்டிவீரன்பட்டி : பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி.மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றது.
இப்பள்ளியில் படித்த தக் ஷின்யா 487, ரோகினி 481, ரகுநாத் 478 மதிப்பெண்கள் பெற்றனர். 450 மேல் 29, 400 மேல் 80, 350 மேல் 113, 300 மதிப்பெண்களுக்கு மேல் 135 பேர் எடுத்தனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு 100 சதவீத தேர்ச்சி பெற உதவிய ஆசிரியர்கள் ,முதல்வர் ஆத்தியப்பன் ஆகியோரை ஹிந்து நாடார்கள் உறவின்முறை சங்க செயலாளர் மோகன்குமார், என்.எஸ்.வி.வி. மெட்ரிக் பள்ளி தலைவர் கோபிநாத், செயலாளர் பிரசன்னா, சங்க இணைச்செயலர் அன்புச்செழியன், ஆண்கள் பள்ளி செயலர் நிர்மல்ராஜீவ் பாராட்டினர்.

