/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காந்திகிராமத்தில் கலெக்டர் ஆய்வு
/
காந்திகிராமத்தில் கலெக்டர் ஆய்வு
ADDED : ஆக 02, 2024 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி : காந்திகிராமம் ஊராட்சி தம்பித்தோட்டம் மேல்நிலைப்பள்ளியில் மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது. தாசில்தார் வடிவேல் முருகன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் மகேஸ்வரி முருகேசன், பி.டி.ஓ.,க்கள் தட்சிணாமூர்த்தி, அருள்கலாவதி முன்னிலை வகித்தனர்.
ஆலமரத்துப்பட்டி, காந்திகிராமம், கலிக்கம்பட்டி, தொப்பம்பட்டி ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் மனு அளித்தனர். கலெக்டர் பூங்கொடி முகாம் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.
பெறப்பட்ட மனுக்களுக்கு அதிகாரிகள் 30 நாட்களில் விசாரித்து தீர்வு வழங்க அறிவுறுத்தினார்.