/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒரு வாரத்தில் ரூ.21 லட்சம் அபராதம்
/
ஒரு வாரத்தில் ரூ.21 லட்சம் அபராதம்
ADDED : செப் 05, 2024 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல்,வத்தலக்குண்டு,கொடைக்கானல்,நிலக்கோட்டை,ஆத்துார்,கன்னிவாடி,பழநி,வேடசந்துார் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.
மாவட்ட அலுவலர் கலைவாணி உத்தரவில் பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், ஜோதிமணி, செல்லத்துரை, ஜாபர்சாதிக், லாரன்ஸ்,கண்ணன்,சரண்யா சோதனை செய்தனர்.
36 கடைகளில் இருந்த 265 கிலோ தடை பொருட்களை பறிமுதல் செய்து கடைகளை சீல் வைத்ததோடு ரூ.21 லட்சம் அபராதம் விதித்தனர்.