ADDED : ஏப் 17, 2024 05:07 AM

திண்டுக்கல் : ''மாவட்டத்தில் 60 இடங்கள் பதட்டமான ஓட்டுச் சாவடிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளதால்,அப்பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாக ,'' திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: லோக்சபா தேர்தலை முன்னிட்டு மத்திய ராணுவ படையினர்,கேரளா போலீசார் என 4000 போலீசார் ஓட்டு மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 60 இடங்கள் பதட்டமான ஓட்டு சாவடிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளோம். பஸ் ஸ்டாண்ட்,ரயில்வே ஸ்டேஷன்,மக்கள் அதிகளவில் கூடும் இடங்களிலும் போலீசார் பணியில் இருப்பார்கள். 24 மணி நேரமும் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். ஏப்.18,19 ல் ஓட்டுசாவடி மையங்களில் எப்படி பணியாற்ற வேண்டும் என போலீசாருக்கு ஆலோசனை வழங்கி உள்ளோம். அரசியல் வாதிகளோடும் ஆலோசனை நடத்தி எதை செய்ய வேண்டும், செய்ய கூடாது என விளக்கம் கொடுத்துள்ளோம். மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை 410 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மதுவை கட்டுப்படுத்த மது விலக்கு போலீசார் முகாம்கள் அமைத்து ஆய்வு செய்கின்றனர் என்றார்.

