sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பதட்டமான ஓட்டு சாவடிகள் 60

/

பதட்டமான ஓட்டு சாவடிகள் 60

பதட்டமான ஓட்டு சாவடிகள் 60

பதட்டமான ஓட்டு சாவடிகள் 60


ADDED : ஏப் 17, 2024 05:07 AM

Google News

ADDED : ஏப் 17, 2024 05:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : ''மாவட்டத்தில் 60 இடங்கள் பதட்டமான ஓட்டுச் சாவடிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளதால்,அப்பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாக ,'' திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது: லோக்சபா தேர்தலை முன்னிட்டு மத்திய ராணுவ படையினர்,கேரளா போலீசார் என 4000 போலீசார் ஓட்டு மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 60 இடங்கள் பதட்டமான ஓட்டு சாவடிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளோம். பஸ் ஸ்டாண்ட்,ரயில்வே ஸ்டேஷன்,மக்கள் அதிகளவில் கூடும் இடங்களிலும் போலீசார் பணியில் இருப்பார்கள். 24 மணி நேரமும் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். ஏப்.18,19 ல் ஓட்டுசாவடி மையங்களில் எப்படி பணியாற்ற வேண்டும் என போலீசாருக்கு ஆலோசனை வழங்கி உள்ளோம். அரசியல் வாதிகளோடும் ஆலோசனை நடத்தி எதை செய்ய வேண்டும், செய்ய கூடாது என விளக்கம் கொடுத்துள்ளோம். மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை 410 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மதுவை கட்டுப்படுத்த மது விலக்கு போலீசார் முகாம்கள் அமைத்து ஆய்வு செய்கின்றனர் என்றார்.






      Dinamalar
      Follow us