
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சின்னாளபட்டி: சின்னாளபட்டி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், மலர், வளையல் அலங்காரம் நடந்தது. பல்வேறு வகையான சாதம் படையல் இடப்பட்டன. மகா தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. அன்னதானத்துடன் மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, வளையல்கள் வழங்கப்பட்டது. கன்னிவாடி தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு திருமஞ்சன அபிஷேகம், வாலை, சக்தி அம்மனுக்கு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது.
ரெட்டியார்சத்திரம் கொத்தப்புள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் கமலவல்லி, ஆண்டாளுக்கு விசேஷ அபிஷேக தீபாராதனைகள் நடந்தது.