sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரோட்டோர வளைவு பள்ளத்தால் தொடரும் விபத்து

/

ரோட்டோர வளைவு பள்ளத்தால் தொடரும் விபத்து

ரோட்டோர வளைவு பள்ளத்தால் தொடரும் விபத்து

ரோட்டோர வளைவு பள்ளத்தால் தொடரும் விபத்து


ADDED : மார் 07, 2025 06:59 AM

Google News

ADDED : மார் 07, 2025 06:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரோட்டில் ஒடும் குடிநீர் : பழநி கிழக்கு பாட்டாளி தெரு ரோட்டில் குடிநீர் குழாய் உடைத்து தண்ணீர் வீணாக ரோட்டில் செல்கிறது.இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் பாதிக்கின்றனர் .இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

--விஜயகுமார் பழநி.

வளைவில் பள்ளம் : எரியோடு அரசு மாணவர் விடுதி அருகில் ரோடு வளைவில் இருக்கும் பள்ளத்தில் டூவீலர்கள் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றன. பள்ளத்தை மூட நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ---

-மணி, எரியோடு.

குப்பையை கொட்டி தீ : பழநி பைபாஸ் ரோடு கோயில் பூங்கா அருகே குப்பையை ரோட்டோரங்களில் கொட்டி தீ வைப்பதால் புகை மண்டலம் ஏற்பட்டு சுவாச கோளாறு ஏற்படுகிறது. குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்.

-முருகேசன், பழநி.

தேவை ஒளிரும் பட்டை : பழநி புது தாராபுரம் ரோடு ரயில்வே கேட் டிவைடரில் ஒளிரும் பட்டை இல்லாததால் விபத்துக்கள் நடக்கிறது. டிவைடரில் ஒளிரும் பட்டை அமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை வேண்டும்.

-எஸ்.மோகன், பழநி.

சேதமான மீட்டர் பெட்டி : திண்டுக்கல் என். எஸ் நகர். மின்கம்பத்தில் உள்ள மீட்டர் பெட்டி சேதமடைந்த நிலையில் தாழ்வாக இருப்பதால் விபத்து அபாயம் உள்ளது .மீட்டர் பெட்டியை மேலே உயர்த்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கார்த்தி, என்.எஸ்.நகர்.

குப்பையால் சுகாதாரக்கேடு : சத்திரப்பட்டியில் ஒட்டன்சத்திரம் ரோட்டில் குப்பையை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ஆங்காங்கே சிதறியும் கிடக்கிறது. குப்பையை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். -

-ஆனந்தன், ஒட்டன்சத்திரம்.

கழிவுநீரால் கொசுக்கள் : ----------பழநி அடிவாரம் கிழக்கு பாட்டாளி தெருவில் சாக்கடையை துார் வாராமல் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளது .துர்நாற்றமும் வீசுகிறது.இதை கருதி சாக்கடையை துார் வார வேண்டும்.

-முத்துக்குமார் பழநி.






      Dinamalar
      Follow us