ADDED : ஆக 01, 2024 05:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானல் , தாண்டிக்குடியில் சாரல் மழை பெய்தது. சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு சாரலுடன் மிதமான மழையும், காற்று வீசி வருகிறது. இதனால் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவுகிறது.
வழக்கத்திற்கு மாறான சீதோஷ்ண நிலையால் சுற்றுலா பயணிகள் , பொதுமக்கள் வெகுவாக பாதித்தனர். இச்சூழலில் பயணிகள் வருகையின்றி முக்கிய சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின. மாலையில் இடைவிடாது சாரல் பெய்து கொண்டு இருந்தது.