/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோட்டோர மணல்களால் தினமும் விபத்துக்கள்...
/
ரோட்டோர மணல்களால் தினமும் விபத்துக்கள்...
ADDED : மே 02, 2024 06:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் மாவட்ட ரோட்டோரங்களில் தற்போது அதிகளவில் மணல்கள் தேங்கி கிடக்கிறது.
இதனால் கனரக வாகனங்கள் செல்லும் போது மணல் துகள்கள் காற்றில் பறந்து பின்னால் வரும் வாகன ஓட்டிகளின் கண்களில் விழுந்து விபத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி மணல்களில் தடுமாறி விழுந்தும் மக்கள் காயமடைகின்றனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்தாமல் இருப்பதால் விபத்துக்கள் தொடரும் நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்தி ரோட்டோரங்களில் தேங்கியிருக்கும் மணல்களை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்கலாமே....

