ADDED : ஜூலை 19, 2024 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் பார்வதீஸ் கலை அறிவியல் கல்லுாரி வணிகவியல் துறை சார்பில் மாணவர்களுக்கு முன்னாள் மாணவரோடு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி செயலர் ஸ்ரீதர்,நிர்வாக இயக்குநர் பிரவீன் சீனிவாசன் பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். கல்லுாரி முன்னாள் மாணவர் சோலைமுத்து கலந்துரையாடினார். வணிகவியல் துறை பத்மபிரியா வரவேற்றார். மாணவி யோகேஸ்வரி நன்றி கூறினார்.