sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

புகையிலை விற்ற தி.மு.க., கவுன்சிலர் விளக்கமளிக்க உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

/

புகையிலை விற்ற தி.மு.க., கவுன்சிலர் விளக்கமளிக்க உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

புகையிலை விற்ற தி.மு.க., கவுன்சிலர் விளக்கமளிக்க உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

புகையிலை விற்ற தி.மு.க., கவுன்சிலர் விளக்கமளிக்க உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்


ADDED : ஜூன் 02, 2024 04:27 AM

Google News

ADDED : ஜூன் 02, 2024 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலரே புகையிலைப் பொருட்கள் விற்றதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியான நிலையில் உணவு பாதுகாப்புத்துறையினர் விளக்கமளிக்க அறிவுறுத்தி உள்ளனர்.

திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் விமலா ஆரோக்கிய மேரி. இவர் திண்டுக்கல் மாநகராட்சி 41வது வார்டு தி.மு.க., கவுன்சிலராக உள்ளார். மேட்டுப்பட்டி எனாமல் பேக்டரி சாலையில் இவர் நடத்தி வரும் தேனீர் கடையுடன் கூடிய மளிகை கடையில் தடை புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது .

ஆய்வு மேற்கொண்ட உணவுப் பாதுகாப்புத் துறையினர் ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்து கடைக்கு சீல் வைத்தனர். சில நாட்களுக்கு பின் கடை செயல்பட துவங்கியது .

இந் நிலையில் கவுன்சிலர் விமலா தடை புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக வீடியோ ஒன்று வைரலானது.உணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் கலைவாணி விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

அதன்படி உணவுப் பாதுகாப்பு அலுவலர் செல்வம் கடைக்கு சென்று சோதனை மேற்கொண்டார்.

ஆனால் தடை புகையிலை இல்லை என்பதை கண்டார். அங்கு கடை ஊழியர்கள் மட்டுமே பணியில் இருந்த நிலையில், உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் கவுன்சிலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us