ADDED : ஜூலை 24, 2024 05:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : -நத்தம் மாரியம்மன் கோயிலில் ஆடி முதல் செவ்வாய்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. மாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
பின்னர் கோயில் வளாகம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்க பூச்சொரிதல் விழா நடந்தது. அசோக்நகர், மீனாட்சிபுரம், தெலுங்கர் தெரு, கோவில்பட்டி, மாரியம்மன் கோயில் தெரு,கர்ணம் தெரு, செட்டியார்குளத்தெரு, காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கையில் பூதட்டுகளுடன் ஊர்வலமாக கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.நத்தம் பகுதி அம்மன் கோயில்களிலும் ஆடி முதல் செவ்வாய்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.