/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போலி ஆவணங்கள் மூலம் முறைகேடு; பத்திரப்பதிவு அலுவலகத்தில் தொடரும் புகார்
/
போலி ஆவணங்கள் மூலம் முறைகேடு; பத்திரப்பதிவு அலுவலகத்தில் தொடரும் புகார்
போலி ஆவணங்கள் மூலம் முறைகேடு; பத்திரப்பதிவு அலுவலகத்தில் தொடரும் புகார்
போலி ஆவணங்கள் மூலம் முறைகேடு; பத்திரப்பதிவு அலுவலகத்தில் தொடரும் புகார்
ADDED : ஆக 02, 2024 06:32 AM
ஆத்துார் : ஆத்துார் பகுதியில் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவில் மோசடி நடந்துள்ளதாக புகார் மனு அளிக்கப்பட்டது.
செம்பட்டி அருகே காமன்பட்டியை சேர்ந்த விவசாயி ஆண்டியகவுடர் மனைவி காமாட்சியம்மாள். இவர்களுக்கு பழனியம்மாள், பழனிச்சாமி, முருகன், ராமன், லெட்சுமி என மகன், மகள்கள் உள்ளனர். ஆண்டியகவுடரும் அவரது மனைவியும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தனர். பழனியம்மாள் உடன் பிறந்தோரை சேர்க்காமல் தான் மட்டுமே வாரிசு என்பதற்கான சான்று பெற்றுள்ளார். இதை கொண்டு , தாய் காமாட்சியம்மாளுக்கு சொந்தமான நிலத்தை மகன் சின்னமணி பெயரில் 2022 ஏப். 25ல் ஆத்துார் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தார். இதே நிலத்தை அடுத்த 2 நாட்களில் ஜெயராம் என்பவருக்கு விற்று பதிவு செய்துள்ளனர்.
லெட்சுமியின் மகன் மாரிமுத்து தலைமையில் உறவினர்கள் சிலர் ஆத்துார் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு பொறுப்பு அலுவலர் அருண் பிரசாத்திடம் புகார் மனு அளித்தனர்.
அவர்கள் கூறுகையில்' முறைகேடு குறித்து தமிழக கவர்னர், பத்திர பதிவு துறை தலைவர், முதல்வரின் தனிப் பிரிவு, மாவட்ட பதிவாளரிடம் புகார் செய்யப்பட்டு உள்ளது' என்றனர்.
இதே அலுவலகத்தில் அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்த வழக்கறிஞர் கிருஷ்ணபெருமாளுக்கு சொந்தமான 45 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் வேறு நபருக்கு பதிவு செய்துள்ளதாகவும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.